நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday 14 April 2010

PIT போட்டிக்காக ''தண்ணீர்''

இந்த மாதம் PIT போட்டிக்கான தலைப்பு '' தண்ணீர்'' என்றறிந்ததும் , இரண்டு வருடங்களுக்கு முன்னர் நயாகரா நீர் வீழ்ச்சியில் நான் எடுத்த சில படங்கள் நினைவு வர அவற்றை தேடித் பிடித்தேன். அமெரிக்க ,கனேடிய எல்லையாக இருக்கும் இந்த நீர் வீழ்ச்சி ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும். இந்தப் படங்களை என் வலையத்தில் பிரசுரிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதை விட சரியான தருணம் கிடையாது என்று தோன்றியதால் இங்கே உங்கள் பார்வைக்கு.











கடைசிப் படத்தைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.


.

30 comments:

Chitra said...

Thank you for bringing back our wonderful memories, visiting that place. Best wishes for you to win the contest!

Unknown said...

ஆஹா...அருமை...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ....

ஜெய்லானி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!

நட்புடன் ஜமால் said...

அதென்ன கப்பலா

படங்கள் அருமை.

அருவியின் பேரிரைச்சல் மனதுக்கு இதம் தருகின்றது ...

அம்பிகா said...

படங்கள் அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கலா said...

ஜெஸி அத்தனை படங்களும்
அருமை எனக்குப் பிடித்தது
நான்காவது படம்.
வெற்றி பெற என் வாழ்த்துகள்.

கொடுத்து வைத்திருக்கிறீர்கள்
இதையெல்லாம்{கண்களால்}
இரசிப்பதற்கு நன்றி ஜெஸி

GEETHA ACHAL said...

படங்கள் மிகவும் அருமை...நீங்கள் கனடா பக்கம் இருந்து படங்களை எடுத்தீங்களா..மிகவும் அருமையாக இருக்கின்றிது...

ஹேமா said...

ஜெஸி...படங்கள் மிகவும் அழகு.உயிரோட்டமாய் இரைகிறது.நான்காவது படம் உயிரோடு ஓடுகிறதே !

நேசமித்ரன் said...

படங்கள் அருமை

வெற்றி பெற வாழ்த்துக்கள் !

பா.ராஜாராம் said...

நல்ல படங்கள் ஜெஸ்.

வெற்றி பெறனும்.பெறாவிட்டாலும் பாதகமில்லை.இதை நேரில் பார்த்ததை விடவா?புகைப்பட வெற்றி?

புத்தாண்டு வாழ்த்துக்களும்,நன்றியும் ஜெஸ்!

சத்ரியன் said...

ஜெஸ்ஸி,

அந்த நாஙாவது படம் வெண்பட்டுத் துணியை தொங்க விட்டது போல்....அழகு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சித்ரா
வருகைக்கு நன்றி .மறக்க முடியாத அனுபவம் இது. நீங்கள் மறந்திருந்தால் தானே நான் நினைவு படுத்தியிருக்க முடியும்.
Thanks for your wishes.

R.Gopi said...

போட்டியில் வென்றிட வாழ்த்துக்கள் ஜெஸ்....

படங்கள் அனைத்துமே அருமை...

ஒரு மினி “நயாகரா” மாதிரி இருக்கு...

Matangi Mawley said...

brilliant!

மீன்துள்ளியான் said...

padangal arumai .
Please try to use composition rules in making photos

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// Han!F R!fay said...

ஆஹா...அருமை...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ....//
//ஜெய்லானி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!! //

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே. போட்டியில் கலந்து கொள்ள இந்தப் படங்கள் உதவியதில் மகிழ்ச்சி. நான் ரசித்த இந்தப் படங்களை அனைவருடனும் பகிர்ந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// நட்புடன் ஜமால் said...

அதென்ன கப்பலா
படங்கள் அருமை.
அருவியின் பேரிரைச்சல் மனதுக்கு இதம் தருகின்றது ...//

ஆமாம் ஜமால். அந்த உல்லாசப் பிரயாணிகளை கொண்டு செல்லும் கப்பலின் பெயர் '' Maid of the Mist ''
மிக அருகில் கப்பல் சென்று எல்லோரையும் வீழ்ச்சியில் நனைய வைத்து திரும்பும். அருவியின் இரைச்சலும் , அதில் நனையும் போது அனைவரினதும் ஆனந்த ஆரப்பரிப்பும் அந்தப் படங்களைப் பார்க்கும் போது என் செவிகளில் ஒலிக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அம்பிகா said...
படங்கள் அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள். //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்பிகா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Anonymous// கலா said...

ஜெஸி அத்தனை படங்களும் அருமை. எனக்குப் பிடித்தது
நான்காவது படம்.வெற்றி பெற என் வாழ்த்துகள்.
கொடுத்து வைத்திருக்கிறீர்கள் இதையெல்லாம்{கண்களால்}
இரசிப்பதற்கு .நன்றி ஜெஸி . //

வாங்க கலா. பலருக்கு அந்த நான்காவது படம் பிடித்திருக்கிறது. அது கப்பலில் இருந்து மிக அருகில் அருவியைப் பிடித்த படம். உண்மையில் அங்கே சென்ற போது அந்தக் காட்சியை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Geetha Achal said...

படங்கள் மிகவும் அருமை...நீங்கள் கனடா பக்கம் இருந்து படங்களை எடுத்தீங்களா..மிகவும் அருமையாக இருக்கின்றிது...//

நன்றி கீதா . ஆமாம்.கனடாப் பக்கம் தான் அதன் முழு அழகும் தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் போது பலர் border யைக் கடந்து வந்து அருவியைப் பார்க்கிறார்கள். பலர் கால் நடையாக கூட வருவதைக் கண்டேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// ஹேமா said...

ஜெஸி...படங்கள் மிகவும் அழகு.உயிரோட்டமாய் இரைகிறது. நான்காவது படம் உயிரோடு ஓடுகிறதே ! //

வாங்க ஹேமா.உங்களுக்கு பிடித்த படமும் எனக்குப் பிடித்தது தோழி. கடைசிப் படம் தூரத்தில் வெள்ளைப் புடவை கட்டியது போல் இரைச்சலில்லாத படம் என்பதாலும் மிகவும் பிடித்தது எனக்கு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...

படங்கள் அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் ! //

வாங்க நேசன். வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
போட்டியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. வெற்றியை எதிர் பார்க்கவில்லை.

கவிதன் said...

கண்களுக்கு குளிர்ச்சியான படங்கள்..... நல்லா எடுத்திருக்கீங்க ஜெஸ்வந்தி! வெற்றிக்கு என் வாழ்த்துக்களும்....

Radhakrishnan said...

மிகவும் அழகிய படங்கள், வெற்றி பெற வாழ்த்துகள்.

மங்குனி அமைச்சர் said...

நீர் வீழ்ச்சி , பாம்பு , யானை , இயற்கை காட்சிகள் எவ்வளவு பாத்தாலும் சலிக்கதுங்க

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி கவிதன்.
நன்றி ராதாகிருஷ்ணன் .
நன்றி மங்குனி அமைச்சர். அடடே பாம்புமா.?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// பா.ராஜாராம் said...
நல்ல படங்கள் ஜெஸ்.
வெற்றி பெறனும்.பெறாவிட்டாலும் பாதகமில்லை.இதை நேரில் பார்த்ததை விடவா?புகைப்பட வெற்றி?//

சரியாகச் சொன்னீர்கள் ராஜாராம். இந்த வீழ்ச்சியைப் பற்றி பலர் சொல்லக் கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி சத்ரியன்.

நன்றி கோபி. மினி நயாகரா பார்க்க விரும்பும் போது என் வலையத்துக்கு வாருங்கள்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி Matangi Mawley .
நன்றி மீன்துள்ளியான்.

Kavinaya said...

படங்கள் ரொம்ப அழகு ஜெஸ்வந்தி!