நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday 24 September 2010

வளர்த்த செடி காட்டிக் கொடுத்த கொலைகாரன்





தாவரங்களுக்கு எங்களைப் போல் நரம்புகளோ மூளையோ இல்லாவிட்டாலும் அவற்றினால் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை 1960 ஆம் ஆண்டிலிருந்து பல ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் Cleve Backster என்பவர் மிக முக்கியமானவர். இவர் கைதிகளிடமிருந்து உண்மையை வாங்க உபயோகிக்கும் ''பொலிகிறாப் '' என்ற உப கரணத்துடன் சில பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் அறையில் இருந்த செடி தனது எண்ணங்களைப் புரிந்து கொண்டதை ( psychic )அவதானித்தார். இந்த '' யூறேகா '' அவதானிப்பை பல உயிரியல் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். ஆனாலும் அவரது இந்த ஆராய்ச்சியை பலர் நம்பி தாவரங்களின் இந்த அபூர்வ சக்தி பற்றி மேலும் பல பரிசோதனைகளைச் செய்தார்கள் . அவர்களில் இந்தியா விஞ்ஞானியான ஜெகதீஸ் சந்திரபோஸ் என்பவரும் ஒருவர். இவர்களின் ஆராய்ச்சி எதுவுமே உயிரியல் ரீதியில் அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் இந்தக் கொள்கையை ஆதரிக்கும் பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். Backster இதனை முதன் முதலாக அவதானித்ததால் இப்படி தாவரங்களின் உணர்ச்சியை பொலிகிராப் மூலம் அளவிடும் முறையை '' Backster effect'' என்கிறார்கள்.

இங்கிலாந்து நகரத்திலுள்ள யாக்றெபர் என்ற இடத்தில் ஒரு மிக வயதான பெண்மணி தனியாக வசித்து வந்தார். உறவுகள் என்று எவரும் இல்லாத அவர் பல செடிகளை வீடு முழுவதும் வளர்த்து வந்தார். அவரது ஏராளமான சொத்துக்களை அவகரிப்பதர்க்காக இவர் படு கோரமான முறையில் கொலை செய்யப் பட்டார். போலிஸ் சந்தேகத்தில் 12 பேரைக் கைது செய்தாலும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்களில் குற்றவாளி யாரென்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. அப்போது அந்த வழக்குக்குப் பொறுப்பான இன்ஸ்பெக்டர் டெஸ்மொன்ட் என்பவர் இந்த '' பொலிகிராப் '' சோதனையை கொலை நடைபெற்ற அறையிலிருந்த செடியில் செய்வதென முடிவெடுத்தார்.

அந்தச் செடியில் உபகரணம் பொருத்தப் பட்டதும் , ஒருவர் ஒருவராக சந்தேக நபர்கள் அந்த அறைக்குள் கொண்டு வரப் பட்டார்கள். ஒரே ஒரு நபர் வந்த போது உபகரணம் கொடுத்த பொலி கிராப் பதிவுகள் பெரும் மாற்றத்தைக் காட்டியது. அவரைக் கைது செய்த போது கொலைகாரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதுவே பக்ஸ்டர் க்குக் கிடைத்த பெரு வெற்றி என்று தோன்றுகிறது.

*** பச்க்சட்டர் செய்த பல ஆராச்சிகளை நான் மிக ஆவலுடன் படித்திருக்கிறேன்.என்னைப் போல் விரும்பிப் படிக்க நினைக்கும் நண்பர்களுக்காக இங்கே சில லிங்க் தந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தாருங்களேன்.
An Interview with Cleve Backster.

Sensing plants-Backster Effect

.

27 comments:

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம்

செடிகளோடு பேசினால் மனம் அமைதியடையும் என்று நான் உணர்ந்ததுண்டு

பின்னோக்கி said...

வித்தியாசமான தகவல். பகிர்தலுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஆச்சரியமான தகவல் ஜெஸ்வந்தி. பகிர்வுக்கு நன்றி.

Paleo God said...

ஆச்சர்யம் :)

பகிர்வுக்கு நன்றிங்க.

கவி அழகன் said...

புதிய தகவல் எங்கிருந்துதான் தேடி பொருக்கி பதிவிடுகிறீர்கள்

வாழ்த்துக்கள் தேடல் தொடரட்டும்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
ம்ம்ம்
செடிகளோடு பேசினால் மனம் அமைதியடையும் என்று நான் உணர்ந்ததுண்டு//

உண்மைதான் ஜமால். மரங்களோடு கதை பேசும் மக்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இசையினால் மரங்களை அதிகம் பூக்க வைக்கலாம் என்று உறுதிப் படுத்தியிருக்கிரார்களே! அப்போ மனிதர்கள் போல் செடிகளும் இசையினை இரசிக்கின்றன என்று தானே தெரிகிறது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பின்னோக்கி said...
வித்தியாசமான தகவல். பகிர்தலுக்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பின்னோக்கி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// ராமலக்ஷ்மி said...
ஆச்சரியமான தகவல் ஜெஸ்வந்தி. பகிர்வுக்கு நன்றி.//

நன்றி ராமலக்ஷ்மி .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆச்சர்யம் :)

பகிர்வுக்கு நன்றிங்க .//

உங்களை ஆச்சரியப்பட வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

அம்பிகா said...
This comment has been removed by the author.
அம்பிகா said...
This comment has been removed by the author.
அம்பிகா said...

அதிசயப் படவைக்கும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஜெஸ்வந்தி

Chitra said...

Very interesting...........

Unknown said...

வித்தியாசமான தகவல்.புதுமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

சத்ரியன் said...

ஜெஸ்ஸி,

வரவர தகவல் களஞ்சியமா மாறிக்கிட்டு வருது உங்க தளம்.

Anonymous said...

நானும் எங்க வீட்டு ரோஜா செடிங்க கூட பேசுவேன்... உங்க வலைபதிவு ஒரு வித்தியாசமான தகவல கொடுத்திருக்கு... நன்றி...

ஹேமா said...

ஜெஸி...இப்படியாத புதுமையான தகவல்கள் படிக்க எனக்கு நிறையவே பிடிக்கும்.நன்றி நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//யாதவன் said...
புதிய தகவல் எங்கிருந்துதான் தேடி பொருக்கி பதிவிடுகிறீர்கள்
வாழ்த்துக்கள் தேடல் தொடரட்டும் //

வாங்க யாதவன். மரங்களைப் பற்றி அறிவதில் எனக்கு இருந்த ஆர்வமும் கூகுளும் தான் இந்தத் தகவலைத் தேடிக் கொடுத்தது. பலருக்கும் இது புதிய தகவல் என்பதில் மிக்க மகிழ்ச்சி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி அம்பிகா.
நன்றி Chitra.
நன்றி ஜிஜி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வலைச் சரத்தில் இந்தப் பதிவைச் சேர்த்து விட்டதற்கும் நன்றி ஜெய்லானி.

Shan Nalliah / GANDHIYIST said...

I OBSERVED OUR HOME PLANTS WERE NOT HAPPY AFTER WE RETURN FROM LONG HOLIDAY...BUT BACK TO NORMAL AFTER FEW DAYS! I TOLD THIS TO MY FAMILY ALWAYS!EVENTHOUGH SOMEONE WATERED THE PLANTS!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சத்ரியன் said...
ஜெஸ்ஸி,
வரவர தகவல் களஞ்சியமா மாறிக்கிட்டு வருது உங்க தளம்.//

வாங்க சத்ரியன் . புதிய தகவல் தந்து உங்களை என் வலைப் பக்கம் வரவைக்கப் பார்க்கிறேன். அவ்வளவு தான்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// ஹேமா said...
ஜெஸி...இப்படியாத புதுமையான தகவல்கள் படிக்க எனக்கு நிறையவே பிடிக்கும்.நன்றி நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. உங்கள் பலருக்கு இது புதுமையான தகவலாய் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// Prem said...
நானும் எங்க வீட்டு ரோஜா செடிங்க கூட பேசுவேன்... உங்க வலைபதிவு ஒரு வித்தியாசமான தகவல கொடுத்திருக்கு... நன்றி...//

மரங்களோடு பேசும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் Prem. அவர்களில் நானும் நீங்களும் அடக்கம்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah said...
I OBSERVED OUR HOME PLANTS WERE NOT HAPPY AFTER WE RETURN FROM LONG HOLIDAY...BUT BACK TO NORMAL AFTER FEW DAYS! I TOLD THIS TO MY FAMILY ALWAYS!EVENTHOUGH SOMEONE WATERED THE PLANTS!//

It is a very interesting mutual sensation.One day someone could work out the mistery behind this observations.

மாதேவி said...

புதிய தகவல் நன்றி ஜெஸ்வந்தி.