நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.
Showing posts with label விருதுகள். Show all posts
Showing posts with label விருதுகள். Show all posts

Thursday, 22 April 2010

விருதுகள் பலவிதம்

பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களாக வலைப் பக்கமே வரமுடியாமல் போய் விட்டதால் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன். அந்த இடை வெளியினால், இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில் நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

1.அம்பிகா -- http://ambicajothi.blogspot.com

2.ஆ. ஞானசேகரன் -- http ://ammaappa.blogspot.com

3. R.Gopi.---http://jokkiri.blogspot.com

4. தேவன் மாயம் ---http://abidheva.blogspot.com.


நண்பர் ஜெய்லானிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


.

Friday, 28 August 2009

விருது வாங்க வாருங்களேன் !


இந்த சுவாரசிய விருது பலர் வலையங்களை அலங்கரித்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதை யார் ஆரம்பித்து வைத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த வலையுலகில் எனக்குக் கிடைத்த அருமை நண்பி சக்தி (வீட்டுப் புறா)
இந்த விருதைக் கொடுத்து என் வலையத்தையும் அலங்கரித்து விட்டார். நன்றி சக்தி.

இந்த விருதை என் வாழ்த்துக்களுடன் சேர்த்து இவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

தமிழரசி- ---------எழுத்தோசை

ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்

உழவன் -----------உழவனின் உளறல்கள்

அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை

R.Gopi-------------எடக்கு மடக்கு

குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்

நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.

பலருக்கும் இதைத் தர மனமிருந்தாலும், காணும் வலையங்கள் அனைத்தையும் இந்த விருது அலங்கரிப்பதால் எனது பட்டியலை இத்துடன் முடித்துவிட்டேன்.
என்றும் போல் இன்றும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

Sunday, 19 July 2009

ஊக்கம் தரும் விருதுகள்.


இந்த வாரம் விருதுகள் பல்வேறு திசையில் பறந்து கொண்டிருக்கின்றன . இப்போ அனைவருக்கும் இந்த சுவாரசிய வலையத்துக்கான விருது என்னவென்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மற்றைய விருதுகளைப் போல் இதுவும் ஒரு ஊக்கம் தரும் விருது தான். இதனை செந்தழல் ரவி என்பவர் ஆரம்பித்திருக்கிறார். என் அன்புத் தோழி எழுத்தோசை -தமிழரசி எனக்கு மனமுவந்து அளித்துள்ளார்.

விருது பெற்று இரண்டு நாள் ஆகிறது. நான் இதனை ஆறு பேருக்கு கொடுக்க வேண்டும். ஆறு பேரைத் தெரிந்து கொண்டு பதிவு போட ஆரம்பிக்கும் போது நான் தெரிவு செய்தவர்களுக்கு மற்றவர்கள் விருது அளித்துவிட்டார்கள். இப்படியே இரண்டு நாள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் எல்லோர் வலையத்தையும் இந்த விருது அலங்கரித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் விருது கொடுக்கும் நண்பர்கள் இதோ

1. ரசனைக்காரி- ராஜேஸ்வரி

2. நேசமிதிரன் கவிதைகள்- நேசமித்திரன்

3. வீட்டுப் புறா -- சக்தி

4.முத்துச் சரம் --ராமலக்ஷ்மி

5. ஒண்ணுமில்லை- ச்சும்மா --.எம் .எம் .அப்துல்லா

6. காதலன் கவிதைகள்- கவிக்கிழவன்.

ஆறு பேருக்கு மட்டும் இந்த விருதைக் கொடுக்கலாம் என்பது இந்த விருதின் விதி முறை. அதனால் நான் ரசிக்கும் மற்றப் பதிவர்களைத் தெரிய முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெறுகிறேன்.



.

Saturday, 18 July 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது


இது என்ன புது விருது என்று பார்ப்போம் என்ற ஆவலில் நண்பர் ரங்கனின் பதிவைப் படிக்கப் போனேன். என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். பல நாள் ஆசையின் நிமித்தம் இந்த ' Best Friend' விருதை இவர் ஆரம்பித்துள்ளார். அதில் முதல் சுற்றில் என் பெயரையும் கண்டேன். நிச்சயம் நான் கனவு காணவில்லை என்று உறுதியாக்கிய பின்பு இதை எழுதுகிறேன்.நன்றி நண்பரே!

இந்த விருதின் விதி முறைகள்

1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
( இது ஜோக் என்றுதான் நினைக்கிறேன்)
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.

நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்

1. ரங்கன்--- என்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டு விருது வழங்கியவர்.

2. தமிழரசி --ரங்கன் இவருக்கு முதலே விருது வழங்கி விட்டாலும் என் விருதும் அவருக்கு நிச்சயம் உண்டு. என்னை அழகாக வலைசரத்தில் அறிமுகம் செய்தது போதாதென்று, சுவாரசிய விருதும் வழங்கிய தோழி இவர்.

3. கவிநயா--வலையத்தில் காலடிவைத்து இரண்டு வாரங்களில் மனமுவந்து பட்டாம் பூச்சி விருதை எனக்கு வழங்கியவர் இவர்.

4. புதியவன்---ஆரம்பத்தில் இருந்தே என் வலையத்தைத் தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்தவர்.

5. Shan Nalliah ---தமிழ் வலயத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை முதலில் தந்த நல்ல நண்பர் இவர்.

6. பா.ராஜாராம்.---பின்னூட்டத்தால் மனதைத் தொடுவது மட்டுமல்லாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் நண்பர்.

7. இராயர் அமிர்தலிங்கம்---எனது எழுத்தை மிகவும் ரசிப்பவர். எனக்குத் தெரியாமலே ' பெண்கள் பதிவில்' என் வலையத்தைச் சேர்த்தவர்.

8. குடந்தை அன்புமணி--ஆரம்பத்திலிருந்து ஊக்கம் தரும் நல்ல நண்பர்.

9. ஹேமா---இவர் படைப்புகள் ஏனோ என்னை யாழ்ப்பாணம் இழுத்துச் செல்கிறது. அதனால் ஈர்க்கப் பட்டு பலமுறை இவர் வீடு போய் வருகிறேன்.

ஒன்பது எனது ராசியான இலக்கமென்பதாலும் , மற்றவர்களுக்கும் சில நண்பர்களை நான் விட்டுக் கொடுக்கும் எண்ணத்துடனும் எனது பட்டியலை இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் இந்த விருதை ஆரம்பித்த ரங்கனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.


.

Monday, 1 June 2009

வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார்!

வண்ணாத்திப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி
பறக்குது பார், பறக்குது பார்,
அழகான செட்டை, அழகான செட்டை
அடிக்குது பார், அடிக்குது பார்.

பூக்கள் மேலே,பூக்கள் மேலே
பறந்து போய், பறந்து போய் ,

ேனதைக்
குடித்து, தேனதைக்
குடித்து
களிக்குது பார், களிக்குது பார்.

சிகப்பு மஞ்சள் கருப்பு வெள்ளை
பொட்டுக்கள் பார் , பொட்டுக்கள் பார்
தொட்டதும் விரலில் தொட்டதும் விரலில்
பட்டது பார், பட்டது பார்



இந்தப் பாட்டு உங்களுக்கு நினைவிருக்கிறதா? பட்டாம்பூச்சி பாடல் நினைவுக்கு வந்து என்னை அந்த சிறு பிராயத்துக்குக் கொண்டு சென்று விட்டது.

அதுமட்டுமல்லாமல், அந்தப் பட்டாம் பூச்சிபோல் நாமும் பறக்க மாட்டோமா ? என்ற ஏக்கத்தையும் கொண்டு வந்து விட்டது. நான் தான் தப்பிப் போய் பெண்ணாய்ப் பிறந்து விட்டேனே.!

நீங்கள் என்னைத் திட்டுவதற்கு முன்பு விடயத்திற்கு வருகிறேன். என் ரசிகை கவிநயா (. உண்மையைச் சொல்லப் போனால்,அவர் என் கதையில் வந்த புரட்சிக் கதா நாயகனின் ரசிகை) எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நான் இந்த வலையத்திற்கு கால் வைத்து இரண்டு வாரத்தில் மனமுவந்து ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒன்றை என் பக்கம் பறக்க விட்டிருக்கிறார், என் எழுத்து அவரைக் கவர்ந்ததை நினைத்து நான் பெரிமிதம் அடைகிறேன்.கவினயாவுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த பட்டாம்பூச்சியை நான் பலர் வலையங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இது யார் யாருக்குக் கொடுப்பாங்க ? ஏன் கொடுப்பாங்க ? என்ற கேள்விகள் மனதில் ஓடிய போதிலும், இப்போதானே இந்த வலையத்தை ஆரம்பித்திருக்கிறேன்! சாவகாசமாகத் தெரிந்துகொள்வோம் என்று நினைத்திருந்தேன். அதற்குத் தேவையே இல்லாமல் கவிநயா பண்ணிட்டாங்க. இப்போ இந்தப் பட்டாம்பூச்சி விருது விடயம் நன்றாகப் புரிகிறது. ஆனாலும் இதை யார் முதலில் ஆரம்பித்தார்கள்? என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. இதில் அழகான அம்சம் என்னவென்றால் ' யான் பெற்ற இன்பம் வையகம் பெற' என மற்றவைகளுக்குப் பட்டாம்பூச்சியைப் பறக்க விடுவதுதான். உங்களுக்குத் தெரியுமோ! என்னவோ! இங்கிலாந்து மக்கள் பாரம்பரியத்தில் இந்தப் பட்டாம்பூச்சி பறக்க வைத்தல் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. இப்போதுகூட திருமணங்களிலும் ,வேறு நினைவு கூரும் வைபவங்களிலும் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுகிறார்கள். இல்லாவிட்டால் திருமணப் புகைப் படங்களில் பட்டாம் பூச்சி பறப்பது போல் பின்திரை போடுகிறார்கள்.




.

நான் பெற்ற ஒற்றைப் பட்டாம்பூச்சியை, வித்தை செய்து மூன்றாக்கி, புதிய பிளாக்கர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெவ்வேறு திக்கில் பறக்க விடுகிறேன். அவை செட்டை அடித்துப் பறக்கும் திசை ..இதோ ...இதோ

.

' இவன்' ......பனித்துளியாய்

http://panithuliyaai.blogspot.com/

.

இவன் என்னும் மோகன் இராஜேந்திரன் நல்ல அழகான கவிதைகள் வடிக்கிறார். இந்த விருது இவரை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று எண்ணுகிறேன்.

.

' மயாதி' .... கொஞ்()சும் (வி)தைகள்

http://konjumkavithai.blogspot.com/

.

புத்தம் புதிய கவி இவர். இவரது கவிதைகள் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் மட்டும் 58 பதிவுகள் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்களேன். இவர் தொடாத தலைப்பே கிடையாது. புதுமையாய் இவர் சூட்டிய வலையத்தின் தலைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது

.

'ஹேமா ........வானம் வெளித்த பின்னும்

http://kuzhanthainila.blogspot.com/


மிக அருமையான கவிதைகள் எழுதுகிறார். அண்மையில் அவர் எழுதிய ' தவிடு தின்னும் தமிழன்' கவிதை என் மனதைத் தொட்டது. அதில் ஒரு தமிழிச்சியின் வலி தெரிகிறது. ஏன் இவருக்கு விருது எவரும் தரவில்லை என்று ஆச்சரியமாகக் கூட இருக்கிறது.

அப்பாடா!! பறக்க விட்டாச்சு!!

, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அவற்றிடம் செய்தியாக அனுப்பியுள்ளேன்


நான் விட்டதும் பட்டாம் பூச்சிகள் பறந்து விட்டன. ஆனால் அது தொட்டுப் போன என் நெஞ்சில் ,விட்டுப் போன தடயங்கள், பல வண்ணப் பொட்டுக்களாக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே!!!

நன்றி நன்றி நன்றி கவிநயா





நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!


.