பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு வாரங்களாக வலைப் பக்கமே வரமுடியாமல் போய் விட்டதால் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன். அந்த இடை வெளியினால், இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில் நண்பர்ஜெய்லானிஅன்புடன்அளித்தஇந்தவிருதைநான் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.
இந்த சுவாரசிய விருது பலர் வலையங்களை அலங்கரித்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதை யார் ஆரம்பித்து வைத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வலையுலகில் எனக்குக் கிடைத்த அருமை நண்பி சக்தி (வீட்டுப் புறா) இந்த விருதைக் கொடுத்து என் வலையத்தையும் அலங்கரித்து விட்டார். நன்றி சக்தி.
இந்த விருதை என் வாழ்த்துக்களுடன் சேர்த்து இவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.
தமிழரசி- ---------எழுத்தோசை
ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்
உழவன் -----------உழவனின் உளறல்கள்
அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை
R.Gopi-------------எடக்கு மடக்கு
குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்
நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.
பலருக்கும் இதைத் தர மனமிருந்தாலும், காணும் வலையங்கள் அனைத்தையும் இந்த விருது அலங்கரிப்பதால் எனது பட்டியலை இத்துடன் முடித்துவிட்டேன். என்றும் போல் இன்றும் என் அன்பும் வாழ்த்துக்களும்.
இந்த வாரம் விருதுகள் பல்வேறு திசையில் பறந்து கொண்டிருக்கின்றன . இப்போ அனைவருக்கும் இந்த சுவாரசிய வலையத்துக்கான விருது என்னவென்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மற்றைய விருதுகளைப் போல் இதுவும் ஒரு ஊக்கம் தரும் விருது தான். இதனை செந்தழல் ரவி என்பவர் ஆரம்பித்திருக்கிறார். என் அன்புத் தோழி எழுத்தோசை -தமிழரசி எனக்கு மனமுவந்து அளித்துள்ளார்.
விருது பெற்று இரண்டு நாள் ஆகிறது. நான் இதனை ஆறு பேருக்கு கொடுக்க வேண்டும். ஆறு பேரைத் தெரிந்து கொண்டு பதிவு போட ஆரம்பிக்கும் போது நான் தெரிவு செய்தவர்களுக்கு மற்றவர்கள் விருது அளித்துவிட்டார்கள். இப்படியே இரண்டு நாள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் எல்லோர் வலையத்தையும் இந்த விருது அலங்கரித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆறு பேருக்கு மட்டும் இந்த விருதைக் கொடுக்கலாம் என்பது இந்த விருதின் விதி முறை. அதனால் நான் ரசிக்கும் மற்றப் பதிவர்களைத் தெரிய முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெறுகிறேன்.
இது என்ன புது விருது என்று பார்ப்போம் என்ற ஆவலில் நண்பர் ரங்கனின் பதிவைப் படிக்கப் போனேன். என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். பல நாள் ஆசையின் நிமித்தம் இந்த ' Best Friend' விருதை இவர் ஆரம்பித்துள்ளார். அதில் முதல் சுற்றில் என் பெயரையும் கண்டேன். நிச்சயம் நான் கனவு காணவில்லை என்று உறுதியாக்கிய பின்பு இதை எழுதுகிறேன்.நன்றி நண்பரே!
இந்தவிருதின்விதிமுறைகள்
1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம். 2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம். ( இது ஜோக் என்றுதான் நினைக்கிறேன்) 3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் . 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.
நான்இந்தவிருதினைஅளிக்கும்நண்பர்கள்
1. ரங்கன்--- என்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டு விருது வழங்கியவர்.
2.தமிழரசி --ரங்கன் இவருக்கு முதலே விருது வழங்கி விட்டாலும் என் விருதும் அவருக்கு நிச்சயம் உண்டு. என்னை அழகாக வலைசரத்தில் அறிமுகம் செய்தது போதாதென்று, சுவாரசிய விருதும் வழங்கிய தோழி இவர்.
3. கவிநயா--வலையத்தில் காலடிவைத்து இரண்டு வாரங்களில் மனமுவந்து பட்டாம் பூச்சி விருதை எனக்கு வழங்கியவர் இவர்.
4. புதியவன்---ஆரம்பத்தில் இருந்தே என் வலையத்தைத் தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்தவர்.
5. Shan Nalliah ---தமிழ் வலயத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை முதலில் தந்த நல்ல நண்பர் இவர்.
6. பா.ராஜாராம்.---பின்னூட்டத்தால் மனதைத் தொடுவது மட்டுமல்லாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் நண்பர்.
7. இராயர்அமிர்தலிங்கம்---எனது எழுத்தை மிகவும் ரசிப்பவர். எனக்குத் தெரியாமலே ' பெண்கள் பதிவில்' என் வலையத்தைச் சேர்த்தவர்.
8. குடந்தைஅன்புமணி--ஆரம்பத்திலிருந்து ஊக்கம் தரும் நல்ல நண்பர்.
9.ஹேமா---இவர் படைப்புகள் ஏனோ என்னை யாழ்ப்பாணம் இழுத்துச் செல்கிறது. அதனால் ஈர்க்கப் பட்டு பலமுறை இவர் வீடு போய் வருகிறேன்.
ஒன்பது எனது ராசியான இலக்கமென்பதாலும் , மற்றவர்களுக்கும் சில நண்பர்களை நான் விட்டுக் கொடுக்கும் எண்ணத்துடனும் எனது பட்டியலை இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் இந்த விருதை ஆரம்பித்த ரங்கனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.